பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளது.

Update: 2020-01-28 03:26 GMT
ஈரோடு,

தமிழகத்தின் 2-வது மிகப்பெரிய அணையான, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை 105 அடி முழு கொள்ளளவு கொண்டது ஆகும்.

இன்றைய நிலவரப்படி இந்த அணையின் நீர்மட்டம் 102.32 அடியாக உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததையடுத்து, கடந்த சில நாட்களாக நீர்வரத்து குறைந்து வந்தது.

இந்நிலையில் இன்று பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 1287 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று வினாடிக்கு 2372 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் தற்போது 30.5 டி.எம்.சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து 150 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்