தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

Update: 2020-01-30 14:49 GMT
சென்னை,

இந்திய தொழில் கூட்டமைப்பின் 125 வது ஆண்டின் தொடக்க விழாவில்  முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது. இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்திற்கு ரூ.19 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. 

ஒற்றை சாளர முறையில் தொழில் தொடங்க நிலவகைப்பாட்டு சான்றிதழ் 50 நாட்களுக்குள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். 213 தொழிற் திட்டங்கள் மூலம் 83.000 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் நடவடிக்கையால் தொழில் வளர்ச்சியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்