சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கப்பலில் வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை

சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் உள்ள 19 பேரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.

Update: 2020-02-19 11:52 GMT
சென்னை

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,000ஆக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் 132 பேர் உயிரிழந்து உள்ளனர்.

சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கப்பலில் வந்த 19 பேரை சோதனை செய்ததில் 2 பேருக்கு லேசான காய்ச்சல்  அறிகுறி இருப்பது தெரியவந்தது.  ஆனால் அவர்களுக்கு மூச்சு திணறல் இல்லை. இதை தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என தகவல் வெளியானது. 

கொரோனா அறிகுறிகளுடன் வந்தவர்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கபட்டு வந்தனர்.  இந்த நிலையில்  2 பேரின் ரத்த மாதிரியை சோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்து உள்ளது.

2 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்