சென்னையில் 3 முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் 3 முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையில் விமான நிலையம்,எழும்பூர் ரெயில் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகிய மூன்று இடங்களுக்கு மர்ம நபர் ஒருவர் டெலிபோன் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்து உள்ளார். இதை தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து 3 இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.