சென்னை மற்றும் உள்மாவட்டங்களில் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்க அரசு முடிவு

"சென்னை மற்றும் உள்மாவட்டங்களில் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்க அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Update: 2020-03-23 02:35 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்புக்கான நடவடிக்கையை முடுக்கிவிடுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேவை வரும் 31 ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

சென்னை மற்றும் உள்மாவட்டங்களில் தேவைக்கு ஏற்ப குறைந்த அளவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்