தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-03-28 06:11 GMT
சென்னை, 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசு  கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் நேற்று நிலவரப்படி, 38 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். 

இந்த நிலையில், மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூரைச் சேர்ந்த 49 வயதான நபர் ஒருவருக்கும் கும்பகோணத்தை சேர்ந்த 42-வயது நபர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

வேலூரை சேர்ந்த நபர், சமீபத்தில் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டிருந்தார் எனவும்  கும்பகோணத்தை சேர்ந்தவர் மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று வந்திருந்தார் எனவும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. 

மேலும் செய்திகள்