உத்தவ் தாக்கரேவுக்கு, மு.க.ஸ்டாலின் நன்றி

உத்தவ் தாக்கரேவுக்கு, மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார்.

Update: 2020-04-05 22:15 GMT
சென்னை, 

தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் தமிழக தொழிலாளர்களின் குறைகளை உடனடியாக தீர்த்து வைக்குமாறும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு டுவிட்டர் மூலமாக கோரிக்கை வைத்திருந்தார்.

இதற்கு பதிலளித்திருந்த உத்தவ் தாக்கரே, இதுகுறித்து தனது அலுவலகம் மூலமாகத் துணை ஆணையரை தொடர்புகொண்டு விசாரித்ததில் அவ்வாறான பிரச்சினைகள் இல்லையென்றும், இருப்பினும் இப்பிரச்சினையைக் கூர்ந்து நோக்கி, தமது மாநிலத்தில் யாரும் சிரமத்திற்கு ஆளாகாமல் கவனித்துக் கொள்வதாக உறுதியளித்தார்.

இதனையடுத்து, மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், உத்தவ் தாக்கரேவுக்கு நன்றி. விரைவாக நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டுக்கள். இந்த நெருக்கடி உள்ளவரை, உங்களுடைய ஆதரவை வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்