தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று- சுகாதாரத்துறை

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

Update: 2020-04-27 12:49 GMT
சென்னை, 

தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், “ தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1937 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 570 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒருநாளில் மட்டும் 81 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1101 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 809 பேர் கொரோனா பாதிப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்