ஊரடங்கிற்கு பின் ஆம்னி பேருந்து பயண கட்டணம் இரு மடங்காக உயர்த்த முடிவு

ஊரடங்கிற்கு பின் ஆம்னி பேருந்து பயண கட்டணம் இரு மடங்காக உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-05-14 08:26 GMT
சென்னை,

தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, ஆம்னி பேருந்து பயண கட்டண தொகையை ஊரடங்கு முடிந்த பின்னர் இரு மடங்காக உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஒரு கி.மீட்டருக்கு ரூ.1.60 என கட்டணம் இருந்த நிலையில், ரூ.3.20 ஆக கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.  ஊரடங்கு முடிந்து பேருந்து சேவை தொடங்கும்போது புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்