மீன்பிடிக்க செல்ல வேண்டாம் - சென்னை வானிலை மையம் அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2020-06-29 08:34 GMT
சென்னை: 

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று வீசும்.  இந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு இடங்களில்  மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்