என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-28 20:00 GMT
சென்னை, 

என்.ஆர். காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பாலன் மறைவுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாலன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

பாலன் புதுச்சேரி எம்.எல்.ஏ.வாகவும், பாப்ஸ்க்கோ மற்றும் ஏ.எப்.டி. பஞ்சாலை தலைவராகவும் பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு புதுச்சேரி மக்கள் நலனுக்காக உழைத்தவர். புதுச்சேரி மக்களின் நன்மதிப்பை பெற்றவர்.

பாலனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்து கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்