விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 203 நபர்களுக்கு கொரோனா தொற்று

விருதுநகர் மாவட்டத்தில் இன்று மேலும் 203 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-31 09:38 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 58,398 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 8,180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 

இதில் 4,664 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 6 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 871 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் இன்று மேலும் 203 நபர்களுக்கு கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8,541ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 5 பெண் செவிலியர்கள், 5 தூய்மை பணியாளர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 5 நாட்களில் மட்டும் கொரோனாவால் 27 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பதால் விருதுநகர் மாவட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

மேலும் செய்திகள்