கொரோனாவால் உயிரிழந்த செவிலியர் உடலை புதைக்க இடையூறு செய்த விவகாரம்- 5 பேர் மீது வழக்குப்பதிவு

கொரோனாவால் உயிரிழந்த செவிலியர் உடலை புதைக்க இடையூறு செய்த விவகாரத்தில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-08-04 05:13 GMT
ராணிப்பேட்டை,

ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் செவிலியர், கொரோனாவால் உயிரிழந்தார்.இதைத் தொடர்ந்து நவல்பூர் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில், உடலை புதைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், பொதுமக்களிடம் அதிகாரிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக  பேச்சுவார்த்தை நடத்தி, உடலை அடக்கம் செய்தனர். இந்த நிலையில்,  செவிலியர் உடலை புதைக்க இடையூறு செய்த விவகாரத்தில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்  பேரில் இந்த வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்