கொரோனா தொற்றால் கடலூர் பெண் சர்வேயர் உயிரிழப்பு
கடலூர் பெண் சர்வேயர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
கடலூர்,
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூர் பெண் சர்வேயர் ராஜேஸ்வரி என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 45 ஆகும்.
அவரை தொடர்ந்து உடன் பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலருக்கும், கிராம உதவியாளருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.