தொழில் அதிபர் நல்லி குப்புசாமிக்கு கொரோனா; தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
தொழில் அதிபர் நல்லி குப்புசாமிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தொழில் அதிபர் நல்லி குப்புசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு, சளியால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது உறவினர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் நல்லி குப்புசாமிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து அந்த மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறியதாவது:-
தொழில் அதிபர் நல்லி குப்புசாமிக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமுடன் உள்ளார். நல்லி குப்புசாமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொழில் அதிபர் நல்லி குப்புசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு, சளியால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது உறவினர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் நல்லி குப்புசாமிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து அந்த மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறியதாவது:-
தொழில் அதிபர் நல்லி குப்புசாமிக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமுடன் உள்ளார். நல்லி குப்புசாமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.