அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் 4ம் தேதி ஆலோசனை
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் 4ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை,
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவை தொடக்கம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.