மேட்டூர் அணையின் நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

Update: 2020-09-23 03:46 GMT
மேட்டூர்,

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வந்து சேரத் துவங்கியது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனை தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு தற்போது 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து இன்று காலை 95.27 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 58.88 டிஎம்சி ஆக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு மேற்கு பாசனத்திற்காக விநாடிக்கு 700 கன அடி வீதம் நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்