அக்டோபர் 18: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம் வெளியாகி உள்ளது.

Update: 2020-10-18 13:12 GMT
சென்னை,

தமிழகத்தில் மேலும் 3,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,87,400ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,37,637 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 4,929 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 56 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்தம் பலி எண்ணிக்கை 10,642 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,036 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,89,995 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 88,643 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 86,96,455 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 89,46,566 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் இன்று மட்டும் 90,286 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 192 மையங்களில் (அரசு - 66, தனியார் - 126) கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு தற்போது 39,121 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,15,121 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 2,319 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,72,247 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 1,595 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக குணமானவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், இறப்பு எண்ணிக்கை விவரம் வருமாறு:-








மேலும் செய்திகள்