சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

Update: 2020-10-24 09:48 GMT
சென்னை,

வடமாவட்டங்களில் கடலோரத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் கனமழையும் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்துவருகிறது. 

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.  

சென்னையில் எழும்பூர், சென்ட்ரல், திருவல்லிக்கேணி, சிந்தாரிப்பேட்டை, கோடம்பாக்கம், தி.நகர், கோயம்பேடு, கிண்டி, சைதாப்பேட்டை, புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், கோவிலம்பாக்கம், கீழ்கட்டளை, ஆலந்தூர், தரமணி, வேளச்சேரி, திருவான்மியூர், அடையார் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.

மேலும் செய்திகள்