புயல் கரையை கடந்த பிறகும் அதன் தாக்கம் 6 மணி நேரம் தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
புயல் கரையை கடந்த பிறகும் அதன் தாக்கம் 6 மணி நேரம் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னை
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது:-
நிவர் புயல் மணிக்கு 11 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. மையம் தகவல்புயலின் பாதையில் தற்போது வரை மாற்றம் இல்லை. நிவர் புயல் காரணமாக இன்று பிற்பகல் முதல் கடலில் அலைகள் 23 அடி வரை உயரும். புதுச்சேரி அருகே இன்று இரவு 8 மணிக்கு புயல் கரையை கடக்க தொடங்கும்.புயல் கரையை கடந்த பிறகும் அதன் தாக்கம் 6 மணி நேரம் தொடரும் என கூறப்பட்டு உள்ளது