புயல் தொடர்பான தமிழக அரசின் பணிகள் பாராட்டும் அளவுக்கு இல்லை என்றாலும், பரவாயில்லை- நடிகர் கமல்ஹாசன்

புயல் தொடர்பான தமிழக அரசின் பணிகள் பாராட்டும் அளவுக்கு இல்லை என்றாலும், பரவாயில்லாத அளவில் இருந்ததாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Update: 2020-11-26 15:15 GMT
சென்னை

சென்னை சைதாப்பேட்டை நிவாரண முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள 250 க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது அவர்களிடம் குறைகளை கேட்டறிந்த கமல்ஹாசன், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என உறுதியளித்தார்.

பின்னர்  நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர்

ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டித்தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் புயல், வெள்ளத்தால் அரசு பாடம் கற்றுக்கொண்ட போதும் எந்த பலனும் இல்லை. புயல் தொடர்பான தமிழக அரசின் பணிகள் பாராட்டும் அளவுக்கு இல்லை என்றாலும், பரவாயில்லாத அளவில் இருந்தது.  புயல் நிவாரணப் பணியில் தமிழக அரசு இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம்  என அவர் கூறினார்.

மேலும் செய்திகள்