புயலால் சேதமடைந்த பேனர்கள் - விரைவில் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

பஸ் நிறுத்தத்தின் மேல் அமைக்கப்பட்டிருக்கும் பேனர் புயலால் சேதமடைந்து ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டிருக்கிறது.

Update: 2020-11-26 23:00 GMT
சென்னை,

சென்னையின் காற்றின் வேகம் தீவிரமாக இருந்து வருவதால் கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் மேற்கூரைகள், இரும்பு தகடுகள் போன்றவை பெயர்ந்து விழுந்து சேதம் அடைந்து வருகின்றனர். அந்தவகையில் சென்னை சைதாப்பேட்டை பஸ் நிறுத்தத்தின் மேல் அமைக்கப்பட்டிருக்கும் பேனர் மழையால் எப்போது வேண்டுமானாலும் சரியலாம் என்ற நிலையில் தொங்கி கொண்டிருக்கிறது. 

காற்றின் வேகம் காரணமாக பறந்து யார் மீதாவது விழுந்து விபரீதம் நடப்பதற்குள் அதனை உரிய முறையில் அகற்றிட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. 
சென்னை சைதாப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களுக்கு ஆபத்தான வகையில் தொங்கிக் கொண்டிருக்கும் பேனர்களை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்