பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கும் திட்டத்தை இன்று மாலை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கும் திட்டத்தை இன்று மாலை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

Update: 2020-12-21 06:51 GMT
சென்னை,

தமிழகத்தில் 2 கோடியே 6 லட்சம் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய தொகுப்புடன் பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகை ரூ.2,500 வழங்குவது தொடர்பாக அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ.5,604 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொங்கல் பரிசாக தலா ரூ.2.500 வழங்கும் திட்டத்தை இன்று மாலை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். தலைமை செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பொங்கல் பரிசு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். 

அரிசு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. ஒரு கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்