தமிழகம், புதுவையில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களும் ஜனவரி 18ம் தேதி முதல் முழுமையாக இயங்கும்

தமிழகம், புதுவையில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களும் ஜனவரி 18ம் தேதி முதல் முழுமையாக இயங்கும் என்று சென்னை உயர்நீதிமன்ற நிர்வாக பதிவாளர் அறிவித்துள்ளார்.

Update: 2020-12-22 06:43 GMT
சென்னை,

தமிழகம், புதுவையில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களும் ஜனவரி 18-ஆம் தேதி முதல் முழுமையாக இயங்கும் எனவும், முழுமையான நேரடி விசாரணைகள் நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நிர்வாக பதிவாளர் அறிவித்துள்ளார்.

வழக்கறிஞர்களுக்கு ஆன்லைன் விசாரணை தேவைப்பட்டால் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாகக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்