பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது அதிமுக பொதுக்குழு
பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது
சென்னை,
பரபரப்பான அரசியல் சூழலில் நாளை அதிமுக பொதுக்குழு கூடுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதி. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு அதிமுக பொதுக்குழு நடைபெறவில்லை. இந்த நிலையில் நாளை கூடும் அதிமுக பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் வாயந்ததாக பார்க்கப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுக பொதுக்குழு கூட உள்ளது குறிப்பிடத்தக்கது.