2019-20 ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் - கால அவகாசம் இன்றுடன் நிறைவு

2019-20 ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

Update: 2021-01-10 12:33 GMT
சென்னை,

கடந்த 2019-20 நிதி ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாளாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக காலக்கெடு இருமுறை நீட்டிக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து இன்றுடன் காலக்கெடு முடவடையும் நிலையில் தாமதமாக கணக்கு தாக்கல் செய்தால் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு இந்த அபராதத் தொகை 5 ஆயிரமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு இருமடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்