கொரோனா பாதிப்பு: உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை
கொரோன பாதிப்பு காரணமாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த 5 ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அமைச்சர் காமராஜ் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு உள்ளார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.