தமிழகத்தில் இதுவரை 59 ஆயிரத்து 226 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் இதுவரை 59 ஆயிரத்து 226 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Update: 2021-01-24 01:54 GMT
சென்னை, 

தமிழகத்தில் நேற்று 168 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் 16 ஆயிரத்து 800 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பு மருந்து தயாராக வைக்கப்பட்டிருந்தது. 

இந்தநிலையில் 7 ஆயிரத்து 381 பேருக்கு ‘கோவிஷீல்டு' தடுப்பு மருந்தும், 194 பேருக்கு ‘கோவேக்சின்' தடுப்பு மருந்தும் என மொத்தம் 7 ஆயிரத்து 575 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 57 ஆயிரத்து 965 பேருக்கு ‘கோவிஷீல்டு' தடுப்பூசியும், 1,261 பேருக்கு ‘கோவேக்சின்' தடுப்பூசி என 59 ஆயிரத்து 226 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் செய்திகள்