சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; காவல்துறை எச்சரிக்கை

சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-02-06 16:44 GMT
சென்னை,

தமிழக காவல் துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சில குறிப்பிட்ட அமைப்புகள் திரளாக கூடி பொது அமைதியை பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

குறிப்பிட்ட அமைப்புகள் அரசியல் காரணங்களுக்காக சட்டத்தை கையில் எடுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது.  பொது அமைதியை பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்