தமிழகத்தில் 481 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி; தமிழக சுகாதார அமைச்சகம் தகவல்
தமிழகத்தில் 481 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன என தமிழக சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
சென்னை,
தமிழக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 481 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இதனால், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 50 ஆயிரத்து 577 ஆக உயர்ந்து உள்ளது. சென்னையில் 180 பேருக்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
483 பேர் இன்று குணமடைந்து சென்றுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 8,34,043 ஆக உள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 98.06 ஆக உள்ளது. தமிழகத்தில் 5 பேர் கொரோனா பாதிப்புகளுக்கு உயிரிழந்து உள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,488 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,585 ஆக உள்ளது. இதுவரை 1,73,76,126 பரிசோதனைகள் நடந்துள்ளன. 4,046 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்து உள்ளது.