12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம்? - விரைவில் அறிவிப்பு

மே 3 ஆம் தேதிக்கு பதிலாக வேறு ஒரு தேதியில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த தமிழக கல்வித்துறை முடிவு செய்திருப்பதக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-04-12 11:47 GMT
சென்னை,

12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3-ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது. இதனால்,  12 ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்குமா? என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. 

இந்த நிலையில்,   முதல்வர் தலைமையில் வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடபாக ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையின் போது12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  

இந்தக் கூட்டம் முடிந்த நிலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. என்னவென்றால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்வு வேறு தேதியில் துவங்கும் எனவும் இது தொடர்பாக  புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

மேலும் செய்திகள்