பிரபல பின்னணி பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை - பாதிரியார் மீது வழக்கு

பிரபல பின்னணி பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-04-13 09:04 GMT
சென்னை

பின்னணி பாடகி ஒருவரின் மகள் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிரியார் ஹென்றி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பின்னணி பாடகி கொடுத்த புகாரில் பாதிரியார் உள்ளிட்டோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தொலைக்காட்சி சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களில் தோன்றும் பாடகி தனது மகளை தனது உறவினர் வீட்டில் விட்டு இருந்தார்.சில நாட்களுக்கு முன்பு சிறுமி தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து கூறி உள்ளார். இதை தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அழைக்கபட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்