தமிழ் மொழியை புறக்கணித்தது ஏன்? மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி
புதிய கல்வி கொள்கை மொழி பெயர்ப்பில் தமிழ் மொழியை புறக்கணித்தது ஏன்? மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி.
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-
புதிய கல்விக்கொள்கையை இந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் மொழி பெயர்த்த மத்திய பா.ஜ.க. அரசு தமிழை புறக்கணித்தது ஏன்? திருவள்ளுவர், அவ்வையார், பாரதி ஆகியோரை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடியே, தமிழ் மொழியை வஞ்சிப்பது ஏன்?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.