‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ 6 லட்சம் புகார்கள் கணினியில் பதிவேற்றும் - ஷில்பா பிரபாகர் சதீஷ்

‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ 6 லட்சம் புகார்கள் கணினியில் பதிவேற்றும் பணிகள் நடக்கின்றன என்று ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-08 14:22 GMT
சென்னை,

தமிழகத்தில் ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, அதற்கான சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீசை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், சிறப்பு அலுவலராக தேர்வு செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை குறித்து கூறுகையில், 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டப்பணிகள் தொடங்கியுள்ளதாகவும், இதன் முதற்கட்டமாக 6 லட்சம் புகார்கள் கணினியில் பதிவேற்றும் பணிகள் நடக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ஷில்பா பிரபாகர் சதீஷ், நெல்லை மாவட்டத்தின் கலெக்டராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்