ஆழ்வார்பேட்டை ரேஷன் கடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-06-16 06:22 GMT
சென்னை:

தமிழகம் முழுவதும் நேற்று முதல் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் 2-ம் தவணையாக ரூ.2 ஆயிரமும், 14 மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரேஷன்  கடையில் முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ரூ. 2000 நிவாரணம், மளிகை பொருட்கள் வழங்கும் பணி குறித்து முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.முதலமைச்சரின் திடீர் வருகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்