தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும் - அண்ணாமலை பேட்டி
தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று பாஜக புதிய தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை,
தமிழக பாஜக. தலைவராக அண்ணாமலை 16-ந்தேதி பதவி ஏற்கிறார். அதற்காக, இன்று கோவையில் இருந்து, சாலை வழியாக சென்னைக்கு புறப்பட்டார்.
அதற்கு முன்னர் கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது:-
''பாஜக கட்சியைப் பொறுத்தவரை மாநிலத் தலைவர் என்ற பொறுப்பு அனைவரையும் இணைத்து அழைத்துச் செல்லும் ஒரு பொறுப்பாகத்தான் பார்க்கிறேன். இதில் வயது என்பது முக்கியமான விஷயம் கிடையாது. மூத்த இளம் தலைவர்கள் என அனைவரையும் செல்வேன். இது ஒரு கூட்டு முயற்சி. பாஜக தனிமனித கட்சி கிடையாது. தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும்.
காவிரி, மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு பாஜக முழு ஒத்துழைப்பு தரும். காவிரி, மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.