சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அரைமணி நேரம் மழை
சென்னை, காஞ்சீபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அரைமணி நேரம் மழை பெய்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் பருவகால மழையை முன்னிட்டு சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மாலை பரவலாக மழை பெய்துள்ளது.
இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் கூறும்போது, சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழையானது அடுத்த 30 நிமிடங்கள் நீடிக்கும் என தெரிவித்தது.
இதேபோன்று, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இன்று மாலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னையில் கிண்டி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், கே.கே. நகர், ராமபுரம், வடபழனி, கோயம்பேடு, அம்பத்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
சென்னை, காஞ்சீபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக வெப்பம் தணிந்து பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.