தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 5½ லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 5½ லட்சம் பேருக்கு தடுப்பூசி.

Update: 2021-08-30 21:12 GMT
சென்னை,

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 920 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. அதில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 5 லட்சத்து 59 ஆயிரத்து 135 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 99 லட்சத்து 76 ஆயிரத்து 593 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். 8 லட்சத்து 81 ஆயிரத்து 464 சுகாதார பணியாளர்களும், 11 லட்சத்து 77 ஆயிரத்து 400 முன்கள பணியாளர்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 46 லட்சத்து 67 ஆயிரத்து 432 பேரும், 45 வயது முதல் 60 வயது வரை உள்ள 95 லட்சத்து 23 ஆயிரத்து 390 பேரும், 18 முதல் 44 வந்துடைய 1 கோடியே 37 லட்சத்து 26 ஆயிரத்து 907 பேரும் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்