புலமைப்பித்தன் ஆஸ்பத்திரியில் அனுமதி வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை

புலமைப்பித்தன் ஆஸ்பத்திரியில் அனுமதி வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை.

Update: 2021-09-02 00:00 GMT
சென்னை,

அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவராக இருந்த கவிஞரும், பாடலாசிரியருமான புலமைப்பித்தன் (வயது 85) திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தற்போது வென்டிலேட்டர் (செயற்கை சுவாசம்) உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல்நிலையை, ஆஸ்பத்திரியின் நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

மேலும் செய்திகள்