கவர்னருடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
சென்னை கிண்டி ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல-அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்தார்.
சென்னை,
தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் கவர்னராக நியமிக்கப்பட்ட நிலையில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பன்வாரிலாலை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் உள்ளனர். தமிழக ஆளுநராக பணியாற்றியதற்கு வாழ்த்து தெரிவிக்க முதல்-அமைச்சர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை காலை 8:30 மணிக்கு தமிழகத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறார். தமிழகத்தில் இன்றுடன் தனது பணிகளை முடித்துக் கொள்ளும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை புறப்பட்டு செல்கிறார்.