தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது உறுதி: அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது உறுதி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியில் கூறியுள்ளார்.

Update: 2021-09-13 20:02 GMT


சென்னை,

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 28,91,021 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது மிகப்பெரிய சாதனை. தமிழகத்தில் இதுவரை 4,03,13,112 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 6 கோடியே 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். எனவே 66 சதவீதத்துக்கும் மேலாக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தமிழக மக்களிடையே பெரிய அளவிலான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் இருந்து தடுப்பூசிகள் போதவில்லை, மக்கள் கூடுதலாக வந்துவிட்டனர் என்று தகவல்கள் வந்தன. அவ்வாறு போட முடியாமல் சென்றவர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொண்டு, அவர்களை தொலைபேசியில் அழைத்து தடுப்பூசி போடப்படும்.

இதேபோல் வாரத்திற்கு ஒருமுறை மெகா கேம்ப் நடத்த இருக்கிறோம். எனவே மத்திய அரசு, தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்