ஊரக உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டி

9 மாவட்டங்களுக்கு நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

Update: 2021-09-15 07:02 GMT
சென்னை, 

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் பணிகள், கூட்டணி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. 

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று அறிவித்துள்ளார். 

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் விருப்ப மனு பெற்று பூத்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருக்கு ரூ.4 ஆயிரம், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினருக்கு ரூ.2 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தே.மு.தி.க. நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க. உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதால் அ.ம.மு.க. உடனான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்