“சேலத்தில் ஒரு லட்சம் மரக்கன்று நட நடவடிக்கை" - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சேலத்தில் ஒரு லட்சம் மரக்கன்று நட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

Update: 2021-09-20 05:40 GMT
சேலம்,

சேலம் அருகே வாய்க்கால்பட்டறையில் 'நகருக்குள் வனம்' திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில்,

சேலம் மாவட்டத்தில் 'நகருக்குள் வனம்' என்ற திட்டத்தின்கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் பாசனமற்ற ஏரிகளை தூர்வாரி பாசனபகுதிகளுக்கு மழைநீரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்