தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி பயணம்

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்ல உள்ளார்.

Update: 2021-09-22 10:42 GMT
சென்னை,

தமிழ்நாட்டின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி கடந்த 18-ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். 1976-ம் ஆண்டு கேரள பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் மத்திய அரசு உளவுப்பிரிவின் சிறப்பு இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

இந்நிலையில், கவர்னர் ஆர்.என். ரவி நாளை டெல்லி செல்கிறார். தமிழ்நாடு கவர்னராக பொறுப்பேற்ற பின்னர் ஆர்.என்.ரவி மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் இதுவாகும். 

நாளை டெல்லி செல்லும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க உள்ளார்.

மேலும் செய்திகள்