விருதுநகரில் சாலை வசதி கோரி மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிக்கான சாலை வசதி கோரி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-05 14:58 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் முத்தால்நாயக்கன்பட்டியில் உயர்நிலைப்பள்ளி இயங்கி வரும் நிலையில், பள்ளிக்கான பாதை இல்லாததால் மாணவர்கள் தனியாருக்குச் சொந்தமான இடத்தின் வழியாக பள்ளிக்குச் சென்று வந்துள்ளனர். ஆனால் தற்போது அந்த இடத்தில் கட்டுமான பணிகளுக்கான ஆயத்த வேலைகள் நடந்து வருவதால், மாணவர்கள் அந்த வழியாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே அந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், தங்களுக்கு உரிய சாலை வசதி ஏற்படுத்தித் தர வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பான தகவலறிந்து வருவாய் அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து சாலை வசதி ஏற்படுத்தி தர உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, மாணவர்கள் அந்த இடத்தில் இருந்து கலைந்து சென்றனர். கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்