பிரதமர் அலுவலக இணைச்செயலாளர் பி.அமுதா, தமிழக அரசு பணிக்கு மாற்றம்
பிரதமர் அலுவலக இணைச்செயலாளர் பி.அமுதா, தமிழக அரசு பணிக்கு மாற்றம் மத்திய அரசு உத்தரவு.
சென்னை,
பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக பணியாற்றிய தமிழக அரசைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.அமுதா, மீண்டும் தமிழக அரசு பணிக்கு திரும்பினார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பி.அமுதா. 1994-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தின் ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். தர்மபுரி உள்பட சில மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றியுள்ளார்.
சிறந்த நிர்வாக பணிக்காக தமிழக அரசின் பாராட்டை பெற்றிருப்பவர் பி.அமுதா. கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் பெருவெள்ளம் சூழ்ந்தபோது சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அப்போது மிகச்சிறப்பாக வெள்ள நிவாரணப் பணிகளை ஆற்றினார். நீரோட்ட பாதைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பல கட்டிடங்களை அப்புறப்படுத்தி அனைவரின் பாராட்டைப் பெற்றார்.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மறைந்தபோது அவரது உடலை மெரினா கடற்கரையில் புதைப்பதற்கு திறம்பட ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக பயிற்சி நிறுவனத்தில் பொது நிர்வாகத்துறையின் பேராசிரியராக இடமாற்றம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து 2020-ம் ஆண்டு ஜூலையில் பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக பி.அமுதா நியமிக்கப்பட்டார். மத்திய அரசு பணியில் 3 ஆண்டுகள் நிறைவடையாத நிலையில், மீண்டும் தமிழக அரசு பணிக்கு பி.அமுதா மாற்றப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக பணியாற்றிய தமிழக அரசைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.அமுதா, மீண்டும் தமிழக அரசு பணிக்கு திரும்பினார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பி.அமுதா. 1994-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தின் ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். தர்மபுரி உள்பட சில மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றியுள்ளார்.
சிறந்த நிர்வாக பணிக்காக தமிழக அரசின் பாராட்டை பெற்றிருப்பவர் பி.அமுதா. கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் பெருவெள்ளம் சூழ்ந்தபோது சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அப்போது மிகச்சிறப்பாக வெள்ள நிவாரணப் பணிகளை ஆற்றினார். நீரோட்ட பாதைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பல கட்டிடங்களை அப்புறப்படுத்தி அனைவரின் பாராட்டைப் பெற்றார்.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மறைந்தபோது அவரது உடலை மெரினா கடற்கரையில் புதைப்பதற்கு திறம்பட ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக பயிற்சி நிறுவனத்தில் பொது நிர்வாகத்துறையின் பேராசிரியராக இடமாற்றம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து 2020-ம் ஆண்டு ஜூலையில் பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக பி.அமுதா நியமிக்கப்பட்டார். மத்திய அரசு பணியில் 3 ஆண்டுகள் நிறைவடையாத நிலையில், மீண்டும் தமிழக அரசு பணிக்கு பி.அமுதா மாற்றப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.