வரும் 23 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

50 ஆயிரம் முகாம்களில் சனிக்கிழமை 6-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Update: 2021-10-18 05:48 GMT
சென்னை,

தமிழகத்தில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமைக்கு  பதில் 23-ம் தேதி சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார்.  50 ஆயிரம் முகாம்களில் சனிக்கிழமை 6-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கும் என கூறினார்.  

மேலும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில்,  “ அசைவ பிரியர்கள், மதுபிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம்களில் பங்கேற்காமல் இருக்கிறார்கள். அசைவம் , மது எடுத்துக்கொண்டால் தடுப்பூசி செலுத்தக் கூடாது என்ற வதந்திகளை நம்புகிறார்கள். இது தவறு” எனவும்  கூறினார். 

மேலும் செய்திகள்