எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி

எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2021-10-21 03:53 GMT
சென்னை,

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பரிசோதனைக்காக சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் இன்று காலை  அனுமதிக்கப்பட்டுள்ளார் .

கடந்த ஏப்ரல் மாதம் குடலிறக்கம் பிரச்சினை காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது . இந்நிலையில் இந்த சிகிச்சை தொடர்பான பரிசோதனை மேற்கொள்வதற்காக அவர் காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . பரிசோதனை முடிந்த பின்னர் இன்று மதியமே அவர் வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது .

மேலும் செய்திகள்