சென்னை வெள்ள பாதிப்புகளை தனித்தனியாக ஆய்வு செய்த ஓபிஎஸ்- ஈபிஎஸ்

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக மேற்கொண்டுள்ளனர்.

Update: 2021-11-12 09:54 GMT
சென்னை,

சென்னையில் பெய்த தொடர் மழையால் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.  தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.  வெள்ள பாதித்த பகுதிகளை தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில், தமிழக  சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, தென் சென்னை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

அதேபோல்,  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சென்னையின் பல பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்