மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்த திட்டமா? முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு

மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்த திட்டமா? முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு.

Update: 2021-11-22 20:00 GMT
சென்னை,

ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உள்பட சில இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல பெரிய அளவில் போராட்டம் நடத்த மாணவர் அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்படுகிறது.

இதனால் மெரினாவில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெரினா சர்வீஸ் சாலைகளில் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பெரிய அளவில் கூட்டமாக கூடவும் போலீசார் அனுமதிக்கவில்லை. ஆனால் உயர் போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, மாணவர்கள் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், அதனால் மெரினாவில் பெரிய அளவில் போராட்டம் நடத்த வாய்ப்பு இல்லை என்றும், சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்படுவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். நேற்று மாணவர்கள் பெரிய அளவில் மெரினாவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதுபோன்ற போராட்டம் எதுவும் மெரினாவில் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்